Monday, August 27, 2012

நாம் நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை

நாம் நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை
* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.


* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.


* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.


* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.

* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, "போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.

* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.

* "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்' என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.

* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.

* கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.
* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.

* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர். 

உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்...


இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!

Saturday, August 11, 2012

TNPSC - பொதுஅறிவு வினா விடைகள்

TNPSC - பொதுஅறிவு வினா விடைகள்
1. அதிக ஒளி கொண்ட கிரகம் எது?
அ) வீனஸ் ஆ) மெர்குரி
இ) ஜூபிடர் ஈ) புளூட்டோ

2. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
அ) தமிழகம்       ஆ) கேரளா
இ) மகாராஷ்டிரா ஈ) மேற்குவங்கம்


3. சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுவது?
அ) ஆக்ஸிஜன்                 ஆ) நைட்ரஸ் ஆக்சைடு
இ) சல்பர் டை ஆக்சைடு   ஈ) கார்பன் டை ஆக்சைடு

4. மிதவை விதியை கூறியவர் யார்?
அ) நியூட்டன்      ஆ) ஐன்ஸ்டீன்
இ) ஆர்க்கிமிடிஸ்  ஈ) பாயில்

5. குளோமெருலஸோடு தொடர்புடைய உறுப்பு எது?
அ) சிறுநீரகம் ஆ) கல்லீரல்
இ) நுரையீரல் ஈ) மூளை

6. வைட்டமின் சி-யின் வேதிப்பெயர் என்ன?
அ) ரிபோ பிளவின் ஆ) அஸ்கார்பிக் அமிலம்
இ) தயமின்             ஈ) கொலஸ்ட்ரால்

7. தேசிய ராணுவக்கல்லூரி அமைந்துள்ள இடம்?
அ) சென்னை  ஆ) மும்பை
இ) டில்லி        ஈ) கோல்கட்டா

8. திறந்தவெளிப் பல்கலைக்கழகம் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட நாடு?
அ) இந்தியா ஆ) அமெரிக்கா
இ) சீனா       ஈ) பிரிட்டன்

9. டில்லியிலுள்ள செங்கோட்டையை கட்டியவர் யார்?
அ) அக்பர்         ஆ) ஜஹாங்கீர்
இ) ஷாஜகான்    ஈ) இல்டுமிஷ்

10. அகல்யாபாய் எந்த நாட்டின் அரசி?
அ) மால்வா   ஆ) பீஜப்பூர்
இ) ஜெய்ப்பூர்  ஈ) குவாலியர்

விடைகள்: 1.(அ) 2.(ஈ) 3.(ஆ) 4.(இ) 5.(அ) 6.(ஆ) 7.(இ) 8.(ஈ) 9.(இ) 10.(அ)

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 7

திருவள்ளுவர்
1. காலம் - கி.மு. 31

2. வேறு பெயர்கள் - தெய்வப் புலவர், செந்நாப் போதார், பொய்யில் புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர்.
3. இவர் எழுதியது - திருக்குறள் (மொத்தம் 133 அதிகாரங்கள். அதிகாரத்திற்கு 10 குறள்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
4. திருக்குறளுக்கு வேறு பெயர் - முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை.
கம்பர்:
5. இயற்பெயர் - கம்பர்
6. பிறந்த ஊர் - தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது
7. தந்தை பெயர் - ஆதித்தன்
8. போற்றியவர் - சடையப்ப வள்ளல்.
9. இயற்றிய நூல்கள் - கம்பஇராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
10. காலம் - பன்னிரெண்டாம் நூற்றாண்டு
தாயுமானவர்
11. பெயர் - தாயுமானவர்
12. பெற்றோர் - கேடிலியப்பர் - கேசவல்லி அம்மையார்
13. மனைவி - மட்டுவார்குழலி
14. ஊர் - நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)
15. பணி- திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்.
16. காலம் - கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
17. நூல் - தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 6

தமிழ்தாத்தா உ.வே.சா.
1. இயற்பெயர் - வேங்கடரத்தினம்

2. பிறந்த ஊர் - உத்தமதானபுரம் (திருவாரூர் மாவட்டம்)
3. சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் உ.வே.சா.வின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
4. காலம் - 19.02.1855 - 28.04.1942
5. தமிழ்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் - என் சரிதம்
6. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் - எட்டுத்தொகை 8, பத்துப்பாட்டு 10, சீவகசிந்தாமணி 1, சிலப்பதிகாரம் 1, மணிமேகலை 1, புராணங்கள் 12, உலா 9, கோவை 6, தூது 6, வெண்பா நூல்கள் 13, அந்தாதி 3, பரணி 2, மும்மணிக்கோவை 2, இரட்டை மணிமாலை 2, இதர பிரபந்தங்கள் 4.
திரு.வி.கலியாணசுந்தரனார்
7. இயற்பெயர்: திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க.
8. பெற்றோர் : விருத்தாசலனார் - சின்னம்மையார்.
9. ஊர் - துள்ளம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
10. சிறப்புப் பெயர் - தமிழ்த்தென்றல்
11. படைப்புகள் : மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு.
12. காலம் : 26.08.1883 - 17.09.1953
முதுமொழிக்காஞ்சி
13. ஆசிரியர்  - மதுரைக் கூடலூர்கிழார்
14. பிறந்த ஊர் - கூடலூர்
15. நூல் குறிப்பு - காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று
16. இந்நூலின் வேறொரு பெயர் - அறவுரைக்கோவை
17. மொத்தம் பத்து அதிகாரங்கள் உண்டு. நூறு பாடல்களால் ஆனது.
18. திரிகடுகம் - நல்லாதனார் (ஆசிரியர்), திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரில் பிறந்தவர்.

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 5

1. அபிதான கோசம் என்பது தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி ஆகும். இது 1902ஆம் ஆண்டு வெளியானது.

2. அபிதான சிந்தாமணி - இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களையும், முதன்முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை தொகுத்து வெளியிட்டவர் சிங்காரவேலனார்.
3. பொது அறிவு, உளவியல், புவியியல், புள்ளியியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கு கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டன. மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
4. அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசன்
5. இயற்பெயர் - கனக சுப்புரத்தினம். ஊர்: புதுச்சேரி
6. பெற்றோர் - கனகசபை - லட்சுமி
7. காலம் - 29 - 04 - 1891      -     21-04-1964.
8. இயற்றிய நூல்கள் - சஞ்சீவி பர்வதத்தின் சாரல், இசையமுது, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
9. சிறப்புப் பெயர்கள் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
நாமக்கல் கவிஞர்.வெ.இராமலிங்கம்
10. பெயர் - இராமலிங்கம்
11. பெற்றோர் - வெங்கடராமன் - அம்மணி அம்மாள்
12. பிறப்பிடம் - மோகனூர் (நாமக்கல் மாவட்டம்)
13. காலம் - 19.10.1888 - 24.08.1972
14. சிறப்பு: விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு அரசவைக் கவிஞர். கதை, கவிதைகளை எழுதித் தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர்.
கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளை
15. இயற்பெயர் - தேசிக விநாயகம் பிள்ளை
16. சிறப்புப் பெயர் - கவிமணி
17. பெற்றோர் - சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி
18. பிறந்த ஊர் - தேரூர் (கன்னியாகுமரி மாவட்டம்)
19. காலம் - 27.08.1876 - 26.09.1954
20. இயற்றிய நூல்கள் - மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உரைமணிகள், மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள்.

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 4

போலி:
1. மூன்று வகைப்படும். 1.முதற்போலி, 2. இடைப்போலி, 3.இறுதிப்போலி.

2. முதற்போலி:  ஒரு சொல்லின் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது வருவது முதற்போலி - எ.டு. மஞ்சு - மைஞ்சு; மயல் - மையல்.
3. இடைப்போலி : ஒரு சொல்லின் இடையெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இடைப்போலி. எ.டு. முரசு - முரைசு, அரசியல் - அரைசியல்.
4. இறுதிப்போலி: ஒரு சொல்லின் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இறுதிப்போலி (கடைப்போலி என்பர்) - எ.டு. - அறம் - அறன், பந்தல் - பந்தர்.
ஓவியம்:
5. ஓவியக் கலைக்கு மற்ற பெயர்கள்: ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி.
6. ஓவியக் கலைஞர்களின் மற்ற பெயர்கள்: ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்.
7. ஓவியக் கலைஞரின் குழுவின் பெயர் - ஓவிய மாக்கள்; ஆண் ஓவியர் - சித்திராங்கதன், பெண் ஓவியர் - சித்திரசேனா.
8. ஓவியம் வரையும் இடம்: சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.
அகரமுதலி:
9. அகராதி என்னும் சொல் தற்போதைய வழக்கில் அகரமுதலி என வழங்கப்படுகிறது.
10. தமிழ் அகரமுதலி வரலாற்றில் செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாகும்.
11. நிகண்டுகளின் பழமையானது - சேந்தன் திவாகரம்.
12. சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் - திவாகரர்.
13. மொத்த நிகண்டுகளின் எண்ணிக்கை - 25
14. நிகண்டுகளின் சிறப்பானது - சூடாமணி நிகண்டு
15. சூடாமணி நிகண்டுவை இயற்றியவர் - மண்டலப்புருடர்
16. வீரமாமுனிவர் தொகுத்த சதுரகாதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
17. சதுரகாதி வெளிவந்த ஆண்டு - கி.பி.1732.
18. சதுரகாதியில் பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாகப் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
19. தமிழ் - இலத்தீன் அகராதி, இலத்தீன் - தமிழ் அகராதி, தமிழ் - பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு - தமிழ் அகராதி, போர்த்துக்கீசிய - இலத்தின் தமிழ் அகராதி ஆகிய அகர முதலிகளை உருவாக்கியவர் வீரமாமுனிவர்.
20. தமிழ் - தமிழ் அகராதி லெவி - ஸ்பால்டிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 3

தாவரங்கள் : காய்களின் இளமை மரபு
1. அவரைப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வாழைக்கச்சல், வெள்ளரிப்பிஞ்சு, கொய்யாப்பிஞ்சு,
பலாமூசு, தென்னங்குரும்பை.
விலங்குகள் : இளமை மரபு
2. குருவிக்குஞ்சு, கோழிக்குஞ்சு, ஆட்டுக்குட்டி, கழுதைக்குட்டி, எருமைக்கன்று, குதிரைக்குட்டி, பன்றிக்குட்டி, குரங்குக்குட்டி, மான்கன்று, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, யானைக்கன்று, புலிப்பறழ், கீரிப்பிள்ளை.
ஒலி மரபுச் சொற்கள்:
3. குயில் கூவும், மயில் அகவும், சேவல் கூவும், காகம் கரையும், கிளி கொஞ்சும், கூகை குழறும், வானம்பாடி பாடும், கோழி கொக்கரிக்கும், நாய் குரைக்கும், பன்றி உறுமும், யானை பிளிறும்.
வினை மரபுச் சொற்கள்:
4. அப்பம் தின், காய்கறி அரி, இலை பறி,  நெல் தூற்று, களை பறி, பழம் தின், நீர் பாய்ச்சு, பாட்டுப்பாடு, மலர் கொய், கிளையை ஒடி, மரம் வெட்டு, விதையை விதை, நாற்று நடு, படம் வரை, கட்டுரை எழுது, தீ மூட்டு, விளக்கேற்று, உணவு உண்.
5. பஞ்சகவ்யம் என்பது - கோமியம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்கள் சேர்ந்த கலவை. இதனை பயிரில் தெளித்தால் புழு, பூச்சிகள் பயிரை நெருங்காது.
6. முதல் வேற்றுமை உருபு என்பது - இயல்பான பெயர், பயனிலையைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை எனவும், எழுவாய் வேற்றுமை எனவும் வழங்கப்படும்.
7. இரண்டாம் வேற்றுமை உருபு என்பது - ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். வளவன் செய்யுளைப் படித்தான். இத்தொடரில் உள்ள செய்யுள் என்னும் பெயர்ச்சொல் ‘ஐ’ என்னும் உருபையேற்றுச் செய்யப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுகிறது.
8. மூன்றாம் வேற்றுமை உருபு - ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்.
9. நான்காம் வேற்றுமை உருபு - கு.
10. ஐந்தாம் வேற்றுமை உருபு - இல், இன்.
11. ஆறாம் வேற்றுமை உருபு - அது
12. ஏழாம் வேற்றுமை உருபு - கண், உள், மேல், கீழ்
13. எட்டாம் வேற்றுமை உருபு - இதற்கு உருபு இல்லை. இதனை விளி வேற்றுமை என்பர். எடுத்துக்காட்டு: கந்தா வா!

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 2

1. மதுரையில் வாழ்ந்த சங்கப்புலவர்கள் - நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார்,
இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார்.
2. இருபதாம் நூற்றாண்டில் நாடகக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர்கள் - பரிதிமாற்கலைஞர், சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார்.
பரிதிமாற் கலைஞர்
3. இயற்பெயர் - சூரிய நாராயண சாஸ்திரி.
4. இவரது காலம் - 1870  - 1903.
5. ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் ஆகியவை இவர் இயற்றிய நாடகங்கள்.
6. நாடக இலக்கணங்களைத் தொகுத்து, நாடகவியல் எனும் நூலை எழுதினார்.
7. மானவிஜயம் நாடகம் களவழி நாற்பது எனும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.
சங்கரதாசு சுவாமிகள்
8. இவரது காலம் 1867 - 1920
9. வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோசனா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு, பவளக்கொடி உள்ளிட்ட நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.
பம்மல் சம்பந்தனார்
10. இவரது காலம் - 1875 - 1964.
11. மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு உள்ளிட்ட 94 நாடகங்களை இயற்றியுள்ளார்.
12. சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே, அமலாதித்தியன் முதலிய நாடகங்களைப் படைத்தார்.

TNPSC GROUP 2 - தமிழ் வினா விடைகள் 1

1. ஒன்பது மணிகள் - முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், ரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்.

2. மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்; சேரர்களின் மாலை - பனம்பூ மாலை, சோழர்களின் மாலை - அத்திப்பூ மாலை, பாண்டியர்களின் மாலை - வேப்பம்பூ மாலை.
3. நால்வகைப்படைகள் - காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை.
பதினெண்கீழ்க்கணக்கு:
4. நாலடியார் நூல்களுள் ஒன்று
5. மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.
6. நாலடி நானூறு என்பது இதன் சிறப்புப் பெயர்.
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் (புகலிடங்கள்)
7. வேடந்தாங்கல்
8. கரிக்கிளி (காஞ்சிபுரம் மாவட்டம்)
9. கஞ்சிரங்குளம்
10. சித்திரங்குடி
11. மேல்செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
12. பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்)
13. உதயமார்த்தாண்டம் (திருவாரூர் மாவட்டம்)
14. வடுவூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
15. கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்)
16. வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்)
17. வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
18. கூந்தன்குளம்(திருநெல்வேலி மாவட்டம்)
19. கோடியக்கரை (நாகப்பட்டினம் மாவட்டம்)