Tuesday, November 13, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 205


1.தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் எது ?
2.தமிழ்நாட்டில் எந்த வகை மரம் அதிக அளவில் காகிதம் செய்யப் பயன்படுகிறது ?
3.நாரிலிருந்து காகிதம் தயாரிப்பது எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது ?
4.பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
5.’காந்தி’ திரைப்படத்தை தயாரித்தவர் யார் ?
6.1951-1952-ல் ஆசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடைபெற்றது?
7.’கிரிக்கெட் மை ஸ்டைல் ‘ என்ற நூலின் ஆசிரியர் யார்?
8.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது ?
9.’அர்ஜூனா ‘ பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு வழங்கப்பப்படுகிறது ?
10.இந்தியாவில் தேக்கு மரம் எங்கு அதிகமாக கிடைக்கிறது ?
பதில்கள்:
1.கி.பி. 16 ஆம் நூற்றாண்டு, 2.யூகலிப்டஸ்,3.எகிப்து,
4.மும்பை,5.ரிச்சர்டு அட்டன்பரோ, 6.டெல்லி,
7.கபில்தேவ்,8.கயத்தாறு, 9.விளையாட்டுத்துறை,10.கேரளா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 204


1.இந்த ஆண்டின் பெண்மனி என்ற சங்கம் எப்போது தொடங்கப்பட்டது ?
2.நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார் ?
3.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் எது ?
4.உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எந்த நாட்டில் உள்ளது ?
5.தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது ?
6.வருமான வரி செலுத்தாத நாடு எது ?
7.ஜெருசலம் எந்த நாட்டின் தலைநகரமாகும் ?
8.பிளாஸ்டிக் பேப்பரை தயாரித்த முதல் நாடு எது ?
9.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன ?
10.ரேடியத்தை கண்டிபிடித்த மேரிகியூரியின் சொந்தநாடு எது?
பதில்கள்:
1.1945 ஆம் ஆண்டு, 2.கிரேக்கர்கள்,3.இந்தியா, 4.அமெரிக்கா,5.ஸ்வீடன், 6.குவைத், 7.இஸ்ரேல்,8.ரஷ்யா, 9.மாலைப் பாடல்கள்,10.போலந்து

Thursday, November 8, 2012

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவியல் வினாக்கள் பகுதி 3



v  காந்த விசைக்கோடுகளின் பண்புகள்

Ø  காந்த விசைக்கோடுகள் வட முனையில் தொடங்கி தென் முனையில் முடிவடைகின்றன.
Ø  காந்த விசைக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.
Ø  காந்த விசைக்கோடுகள் மற்ற பகுதியைக் காட்டிலும் முனைகளின் அருகில் அதிக செறிவுடன் இருக்கும்.
Ø  காந்த விசைக்கோடுகள் மூடிய வளைகோடுகள் ஆகும்.
Ø  ஒரே சீரான காந்தப் புலத்தில் காந்த விசைக்கோடுகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.

Ø  இரும்பின் கியூரி வெப்பநிலை 770 டிகிரி சென்டிகிரேட்.
Ø  காந்தத்தைச் சுற்றி அமைந்திருப்பது காந்தப்புலம்.
Ø  இரும்பு ஒரு மென்காந்தப் பொருள்.
Ø  காந்தக் கேடயமாகப் பயன்படும் பொருள் தேனிரும்பு.
Ø  காந்த ஒதுக்கத்தை அளக்கப் பயன்படும் கருவி கியூ காந்தமானி.
Ø  காந்தக் கேடயத்திற்கு புவிக் காந்தப் புலம் கிடையாது.
v  தற்காலிக காந்தம் - இரும்பு.
Ø  காந்தமாக்கப்படக் கூடிய பொருள் - நிக்கல்.
Ø  காந்தப் புலச் செறிவின் அலகு ஆம்பியர்/மீட்டர்
Ø  காந்த உட்புகு திறன் அலகு ஹென்றி/மீட்டர் ஆகும்.
Ø  ஒரு சட்டக் காந்தத்தினை தடையின்றி தொங்கவிடும்போது அதன் முனை, புவியின் வடக்கு தெற்கு திசையை நோக்கி நிற்கும்.
v  மின்விசைக் கோடுகளின் பண்புகள்
Ø  மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் துவங்கி எதிர் மின்னூட்டத்தில் முடிவடையும்.
Ø  மின்விசைக்கோட்டுக்கு ஒரு புள்ளியில் வரையப்படும் தொடுகோடு அப்புள்ளியில் மின்புலத்தின் திசையைக் குறிக்கும்.இக்கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்வதில்லை.
Ø  கடத்தியின் பரப்புக்கு விசைக்கோடு எப்போதும் செங்குத்தாக இருக்கும்.
Ø  மின்னழுத்தத்தின் அலகு வோல்ட் ஆகும். சாதாரணமாக நாம் மின்னழுத்தத்தை வோல்டேஜ் என்று குறிப்பிடுகின்றோம்.
Ø  மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.
Ø  ஒரு கூலும் மின்னூட்டம் கடத்தி ஒன்றின் வழியே ஒரு வினாடியில் பாய்ந்தால் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.
Ø  மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டுக்கு நேர்த்தகவில் இருக்கும்.
Ø  மின்திறனின் அலகு வாட் ஆகும்.
 v  மின் அதிர்ச்சி:

Ø  உலர்ந்த தோலுக்கு உயர் மின்தடை இருக்கும். அப்போது பாயும் மின்னோட்டம் குறைவாகும். மின்னதிர்ச்சி அங்கு மென்மையாக இருக்கும். ஈரத்தோலுக்கு மின்தடை மிகக் குறைவு.
Ø  மின்னோட்டம் மிக அதிகமானால் சுவாச சிக்கல்கள் ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படக்கூடும்.
Ø  மின்னோட்டமே மனிதனைக் கொல்லும்; உயர்ந்த மின்னழுத்தம் கொல்லுவதில்லை.
Ø  எபொனைட் தண்டை கம்பளியால் தேய்ப்பதால் உண்டாகும் மின்சாரம் எதிர்மின்னூட்டம்.
Ø  பொதுவாக உலோகங்கள் ஓர் நற்கடத்தியாகும்.
Ø  கூரிய முனையில் அதிக மின்னூட்டம் இருக்கும்.
Ø  உலோகங்களின் மின் கடத்தலுக்குக் காரணம் கட்டுறா எலெக்ட்ரான்கள்.
Ø  கடத்திகளின் கூரான முனைளிலிருந்து மின்னூட்டம் மிக விரைவாக வெளியேறுவதை பெஞ்சமின் பிராங்க்லின் கண்டுபிடித்தார்.
Ø  மனித உடல் ஒரு மின்கடத்தி.
Ø  மின் தூண்டுதலால் ஏற்படுத்தப்படும் மின்னூட்டம் தூண்டப்பட்ட மின்னூட்டம் என்கிறோம்.
Ø  நீர்த்துளிகள் சேர்ந்த தொகுப்பே முகில் எனப்படும்.
Ø  மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் மின்தடை.
Ø  மின்சார மணி மின்காந்த விளைவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
Ø  நீச்சல் விதியை உருவாக்கியவர் ஆம்பியர்.
Ø  மின்சார மணியில் மின்சாரத்தை விட்டு விட்டு பாய்ச்ச உதவும் அமைப்பு ஆர்மச்சூர்.
v  இயற்கை கதிரியக்கத் தனிமங்கள்:
Ø  யுரேனியம், தோரியம், பொலோனியம், ரேடியம் போன்றவை இயற்கை கதிரியக்கத் தனிமங்கள் ஆகும்.
Ø  செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கதிரியக்க ஐசோடோப்புகள் ரேடியோ நியூக்ளைடு அல்லது கதிரியக்க ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
Ø  ஆல்ஃபா துகள்கள் ஹீலியத்தின் உட்கருவைப்பெற்றவை. ஹைட்ரஜன் அணுநிறையைவிட 4 மடங்கு கனமானது.
Ø  ஆல்ஃபா துகளானது கதிரியக்கத் தனிமங்கள் வெளியிடும் மிகப்பெரிய துகள் ஆகும்.
Ø  ஆல்ஃபா துகளானது அதிக நிறையும் அதிக திசைவேகத்தையும் பெற்றிருப்பதால், இவற்றின் இயக்க ஆற்றல் அதிகமாகும். எனவே இவை செயற்கை தனிமங்களை உருவாக்கப் பயன்படும் தாக்கிகளாகப் பயன்படுகிறது.
Ø  பீட்டா கதிர்கள் புகைப்படத் தாள்களை பாதிக்கும்.
Ø  பீட்டா கதிர்கள் மெல்லிய அலுமினியத் தகடைக் கடக்கக் கூடியது.
Ø  காமா கதிர்கள் கண்ணிற்கு புலப்படாது.
v  காமா கதிர்கள் நின்றொளிர்தலை உண்டாக்கும்.

Ø  காமா கதிர்கள் காற்றினை அயனியாக்கும்.
Ø  காமா கதிர்கள் பொருள்களின் மீது விழும்போது பீட்டா கதிர் அல்லது எலெக்ட்ரான்களை வெளியேற்றுகின்றன.
Ø  எலெக்ட்ரோ மீட்டர், கெய்கர் முல்லர் எண்ணி, மேகப்பெட்டகம், குறைகடத்தி மின்சுற்றுகள் இவை யாவும் கதிரியக்க வீச்சுகளை அறிய பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும்.
Ø  பாஸ்பரஸ் 32 அல்லது ஸ்ட்ரான்சியம் - 90 ஆகியவை தோல் புற்றுநோயைக் குணப்படுத்தும்.
Ø  மருத்துவக் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்க கதிர்வீச்சு பயன்படுகிறது.
Ø  டிரிட்டியம், கார்பன் 14 போன்றவை உயிரியல் மூலக்கூறுகளைக் கண்டறிய பயன்படுகிறது,.
Ø  ரேடியோ ஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர்விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை, ஆகியவற்றை உருவாக்கலாம்.
Ø  காமா கதிர்களைப் பயன்படுத்தி அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை அறிய முடியும்.
Ø  கதிர்வீச்சுகளின் உதவியால் பொருள்களின் அமைப்பு வாய்ப்பாட்டை கண்டறியலாம்.
Ø  கதிரியக்க அயோடினைப் பயன்படுத்தி கரைசல்களில் தங்கியிருக்கும் மிகச்சிறிய அளவு சில்வர் கசடுகளையும் கண்டறியலாம்.
Ø  கதிரியக்க ஐசோடோப்புகள் வேதிவினைகளின் சுவடறி தனிமங்களாகப் பயன்படுகிறது.
Ø  நியூட்ரான் கிளர்வு ஆய்வு மூலம் ஆர்செனிக் நச்சுத் தன்மையைக் கண்டறிவதில் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
Ø  தொல்பொருள் மற்றும் பழம்பொருளின் வயதை அறிய கார்பன் -14 ஐசோடோப்பு பயன்படுகிறது.
Ø  கதிரியக்க கார்பனின் அரை ஆயுள் காலம் 5,730 ஆண்டுகள்.
Ø  கார்பன் - 14  கதிரியக்கத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் படிவங்களின் வயதை கண்டுபிடிக்கலாம். இது கதிரியக்க கார்பன் தேதியிடல் எனப்படுகிறது.
Ø  ரேடியோ தேதியிடுதல் முறையில் விண்கற்கள், நிலவில் உள்ள பாறைகள் ஆகியவற்றின் வயது கணக்கிடப்படுகிறது.
v  அம்மோனியா:

Ø  நிறமற்ற, கார நெடியுடைய வாயு.
Ø  காற்றைவிட லேசானது. மிக எளிதாக அதனை நீர்மமாக்கலாம்.
Ø  அம்மோனியம் சல்பேட், அம்மோனியம், நைட்ரேட் போன்ற உரங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது.
Ø  நைட்ரிக் அமிலம், அம்மோனியம் குளோரைடு போன்ற சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
Ø  பனிக்கட்டி தயாரிக்கவும், அம்மோனியா குளிர்ப்பானாகவும் பயன்படுகிறது.
Ø  மருந்தாகவும், எண்ணெய், கொழுப்பு முதலியவற்றை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
Ø  அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருளாகப் பயன்படுகிறது.

v  பாக்டீரியாக்கள்

Ø  பாக்டீரியங்கள் யாவும் ஒரு செல் புரோகரியாடிக் உயிரிகளாகும்.
Ø  பாக்டீரிய செல்லில் முழுமையான நியூக்ளியஸ் இல்லை. இதன் மரபுப் பொருள் நியூகிளியாடய்ட் அல்லது குரோமட்டின் உடலம் எனப்படும். நியூக்ளியஸிற்கு சவ்வு கிடையாது.
Ø  பாக்டீரிய செல்லில் மறைமுக செல்பகுப்பு நடைபெறுவதில்லை.
Ø  பாக்டீரிய ரிபோசோம் சைட்டோபிளாசத்தில் விரவி காணப்படுகின்றன.
Ø  பாக்டீரியங்கள் பிளவுறுதல் மூலம் பெருக்கமடைகின்றன.
Ø  பாக்டீரியங்களில் தன் ஊட்டமுறை மற்றும் சார் ஊட்ட முறை என்ற இரண்டு வகையான ஊட்ட முறைகள் காணப்படுகின்றன.
Ø  பசும் கந்தக பாக்டீரியம், வெளிர் சிவப்பு கந்தக பாக்டீரியங்கள் ஆகியவை ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியங்களுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
Ø  ஒளிச்சேர்க்கை அல்லது வேதிசேர்க்கை மூலம் தன் உணவை தானே தயாரித்துக் கொள்பவை தன் ஊட்ட முறை பாக்டீரியங்கள் ஆகும். எடுத்துக்காட்டு குளோரோபியம்.
Ø  இறந்த அல்லது உயிருள்ளவற்றிலிருந்து ஊட்டப் பொருள்களை பெறும் பாக்டீரியங்கள் சார் ஊட்டமுறை பாக்டீரியங்கள் ஆகும்.
Ø  காக்கஸ் என்பது கோள வடிவ பாக்டீரியங்கள்
Ø  பேசில்லஸ் என்பது கோல் வடிவ அல்லது குச்சி வடிவ பாக்டீரியங்கள்.
Ø  ஸ்பைரில்லம் என்பது சுருள் வடிவம் கொண்ட பாக்டீரியங்கள்.
Ø  விப்ரியோ - கமா என்பது வளைந்த வடிவை கொண்ட பாக்டீரியங்கள்
Ø  மைக்ரோகாகஸ் என்பது தனித்தனி கோளவடிவ செல்களை உடையது.
Ø  டிப்ளோகாக்கஸ்  என்பது இரட்டையாக அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை.
Ø  ஸ்ட்ரெப்டோகாகஸ் என்பது சங்கிலி வடிவில்அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை.

v  கசையிழைகள்:

Ø  இவை நீண்ட ரோமம் போன்ற அமைப்புகளாகும். இவை பாக்டீரியங்களின் இயக்கத்தில் ஈடுபடுகின்றன. ப்ளாஜெல்லின் என்ற புரதத்தை கொண்டுள்ளது.
Ø  ஒற்றை கசையிழை பாக்டீரிய செல்லின் ஒரு முனையில் ஒரு கசையிழை இருக்கும். எடுத்துக்காட்டு: விப்ரியோ மெட்சினிகொலி.
Ø  பாக்டீரியங்கள் இயற்கையின் துப்புரவாளர்கள். நிலத்தில் சேகரமாகும் இறந்த தாவரங்கள்,விலங்குகள் மற்றும் பல வகை கரிம கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை அழுகச் செய்து சிதைக்கின்றன.
Ø  லேக்டோகாகஸ் லாக்டிஸ், லேக்டோபேசில்லஸ் மற்றும் லூகோநாஸ்டாக் கிரிமோரிஸ் ஆகிய லாக்டிக் அமில பாக்டீரியங்கள் பால் பண்ணைத் தொழிற்சாலையில் சுவையூட்டப்பட்ட பால் பொருள்கள் மோர், பல்கேரியன் யோகர்ட், கேஃபிர், குமிஸ் ஆகியவற்றை தயாரிக்கப் பயன்படுகிறது.
 v  பூஞ்சைகள்:

Ø  பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை.
Ø  பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு ‘மைகாலஜி’ என்று பெயர்.
Ø  பொதுவாக பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியோட்டுகள் ஆகும்.
Ø  பூஞ்சைகள் மட்குண்ணிகள், ஒட்டுண்ணிகள் என இரண்டு வகையான வேறுபட்ட ஊட்ட முறைகளை கொண்டுள்ளது.
Ø  மட்குண்ணிகள் இறந்த மற்றும் அழுகிய அங்ககப் பொருள்களின் மீது வாழ்கின்றன. எடுத்துக்காட்டு; ரைசோபஸ், அகாரிகஸ்.
Ø  பூஞ்சையின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகின்றது.
Ø  மைசீலியங்கள் கிளைத்த, மெல்லிய இழைகளால் ஆனவை. இந்த இழைகளுக்கு ஹைபாக்கள் என்று பெயர். பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸினால் ஆனது.
Ø  மைசீலியம் வளரக்கூடிய தளத்திற்கு வளர்தளம் என்று பெயர்.
Ø  வண்ணான் படை அல்லது தேமல் போன்றவை பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும்.
Ø  சில பூஞ்சைகள் மரப்பட்டையில் வளர்கின்றன. மரக்கட்டையின் மீது வளர்வது சைலோபில்லஸ் அல்லது மரக்கட்டை பூஞ்சையாகும்.
Ø  முடி அல்லது மாட்டுக் கொம்பு போன்ற பொருளின் மீது வளர்பவை கெராட்டினோபில்லஸ் அல்லது கெரடின் பூஞ்சைகள் எனப்படும்.
Ø  சில பூஞ்சைகள் உயர்நிலைத் தாவரங்களின் வேர்களோடு கூட்டுயிரியாக வளர்கின்றன. இந்த வகை வேர்களுக்கு மைகோரைசா என்று பெயர்.
Ø  பூஞ்சையினுடைய உடலம் மைசீலியம் எனப்படும். மைசீலியமானது மெல்லிய இழைகள் போன்ற ஹைபாக்களால் ஆனது.
Ø  ஈஸ்ட்டு போன்ற பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்களாகும்.
 v  பிரையோபைட்டா:

Ø  இவை எளிய வகைத் தாவரங்கள். தாவர உலகத்தின் இரு வாழ்விகள் எனப்படும்.
Ø  இவை நிலத்திலும் நீரிலும் வாழ்பவை.
Ø  இவற்றில் வாஸ்குலார் திசுக்கள் இல்லை.
Ø  பிரையோபைட்டாவின் தாவர உடலம், தாலஸ் எனப்படும்.
Ø  கேமிட்டோஃபைட் தனித்து வாழும் தாவரம் ஆகும்.
Ø  நீர்வாழ் பிரையோபைட்டுகள் ரியல்லா ஃபுளுயிட்டன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
Ø  சதுப்புநிலப் பகுதியில் வாழும் பிரையோபைட்டுகள் ஃபேக்னம் என்று அழைக்கப்படுகிறது.
v  ரிக்ஸியா:

Ø  இது ஒரு ஈரல் வடிவ பிரையோஃபைட் ஆகும்.
Ø  ஈரமான நிலத்தில் வாழும் நிழல் விரும்பி தாவரமாகும். இது பொதுவாக மழைக்காலங்களில் ஈரமான சுவர்களிலும், மண்ணிலும் ஆற்றங்கரையிலும் வளரும் தன்மை உடையது.
Ø  நீரில் வாழும் ரிக்ஸியா சிற்றினத்தின் பெயர் ரிக்ஸியா புளயிட்டன்ஸ்.
Ø  ரிக்ஸியாவின் கேமிட்டோஃபைட் கிடைமட்டமாக வளரும் தட்டையான தாலஸ் ஆகும்.
Ø  ரிக்ஸியாவில் நடைபெறும் இனப்பெருக்க வகைகள் உடல இனப்பெருக்கம், பாலினப் பெருக்கம் ஆகும்.
Ø  ரிக்ஸியாவில் ஊகேஸ் வகை பாலினப் பெருக்கம் நடைபெறுகிறது.
Ø  ரிக்ஸியாவில் ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் பெயர் - ஆந்தரிடியம்.
Ø  ரிக்ஸியாவில் பெண் இனப்பெருக்க உறுப்புகளின் பெயர் - அர்க்கிகோனியம்.
Ø  ரிக்ஸியா என்பது லிவர்வெர்ட் வகையைச் சார்ந்த ஒரு தாவரமாகும்.
 v  ஜிம்னோஸ்பெர்ம்கள்:

Ø  திறந்த விதைகள் கொண்ட தாவரங்கள் எனும் பொருள்படும்.
Ø  ஜிம்னோஸ்பெர்ம்களில் சூல்கள் சூல்பைக்குள் இல்லை.
Ø  டயானோசார்கள் காலத்தில் ஜிம்னோஸ்பெர்ம்கள் பூமி மீது மண்டிக்கிடந்தன.
Ø  ஜிம்னோஸ்பெர்ம்களின் வாழ்க்கைச் சுழலில் இரண்டு சிறப்பு நிலைகள் காணப்படுகின்றன. அவை இருமய ஸ்போராபைட்டு, ஒரு மய கேமிட்டோபைட்டு நிலைகளாகும்.
Ø  தாவர உடல் ஸ்போரோபைட் நிலையைச் சார்ந்தது ஆகும். ஸ்போராபைட்டுகள் பெரும்பாலும் வேர், தண்டு இலைகளைக் கொண்ட உயரமான மரங்கள் ஆகும்.
Ø  செக்கோயா என்னும் மரம் சுமார் 120 மீட்டர் உயரம் வரை வளரும்.
Ø  சில ஜிம்னோஸ்பெர்ம்களின் வேர்கள், வேர்ப் பூஞ்சைகளுடனும், நீலப் பசும்பாசிகளுடனும் தொடர்பு கொண்டுள்ளன.
Ø  முதல் நிலை வாஸ்குலார் திசுக்களுடன் இரண்டாம் வாஸ்குலார் திசுக்களும் உள்ளன.

 v  ஆஞ்சியோஸ்பெர்ம்கள்:

Ø  ஜிம்னோஸ்பெர்ம்கள், ஆஞ்சியோஸ்பெர்ம்கள் விதையுள்ள தாவரங்களாகும்.
Ø  இவை ஸ்பெர்மாட்டோஃபைட்டுகள் எனப்படும்.
Ø  மலரும் தாவரங்கள் அனைத்தும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் பிரிவைச் சேர்ந்தவை. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் தாவர வகைகளிலேயே மிக அதிக மேம்பாடற்ற தாவர வகையாகும்.
Ø  ஏனைய தாவர வகைகளைவிட மிக அதிக எண்ணிக்கையிலும், அன்றாட வாழ்வில் நாம் காணும் தாவரங்களும், ஆஞ்சியோஸ்பெர்ம் வகையை சார்ந்தவையாகும்.
v  மகரந்தச் சேர்க்கை:

Ø  தன் மகரந்தச் சேர்க்கை என்பது ஆட்டோகாமி எனப்படும். பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கோ அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.
Ø  ஒரு பூவின் மகரந்தம் மற்றொரு தாவரத்தின் பூவில் உள்ள சூலகத்தை சென்றடைவதோ அல்லது அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தை சென்றடைவதோ அயல் மகரந்தச் சேர்க்கை அல்லது அல்லோகாமி எனப்படும்.
Ø  பெரும்பாலான இருபால் மலர்களில் தன் மகரந்தச் சேர்க்கையை விட அயல் மகரந்தச் சேர்க்கை பொதுவாக நடைபெறுகிறது.
Ø  அயல் மகரந்தச் சேர்க்கை விளைவாக உருவாகும் விதைகள் யாவும் முளைக்கும் திறன் மற்றும், திடமான தாவரங்களாக வளரும் தன்மையை பெற்றிருக்கும்.
Ø  விலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை சூபில்லி எனப்படும். இத்தகைய மலர்கள் சூபில்லஸ் மலர்கள் எனப்படும்.
Ø  பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை அடையும் தாவரங்களில் தெளிவாக வெளிப்படும் விதத்தில் மலர்கள் வண்ணத்தையும், நல்ல நறுமணத்தையும் பெற்றிருக்கும். பூவரசு முதலிய தாவரங்களில் இந்த இரண்டு பண்புகளும் உள்ளன.
Ø  காற்றினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்கள் அனிமோபிலஸ் மலர்கள் எனப்படும்.
Ø  னஹடிரில்லா, வாலிஸ்நீரியா போன்ற நீர் வாழ் தாவரங்களில் நீரின் வழி மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. வாலிஸ் நீரியா நீரில் மூழ்கி வளரும் ஈரில்லத் தாவரம். இவற்றில் இலையானது ரிப்பன் வடிவத்தில் இருக்கும்.
Ø  இருபால் மலர்களில் மகரந்தத் தூள்களும், சூலகமும் ஒரே நேரத்தில் முதிர்வடைவதால் தன் மகரந்தச் சேர்க்கைக்கு வாய்ப்புள்ளது.
 v  தாவரவியல் - பொதுவானவை:

Ø  சதைக்கனி பொதுவாக வெடிக்காது.
Ø  இருபுறவெடிகனிக்கு சிறந்த எடுத்துக்காட்டு லெகூம் தாவரங்கள்.
Ø  ஒரு மலரின் இணையாத பல சூலிலைகளைக் கொண்ட சூலகத்திலிருந்து உருவாகும் கனி திரள்கனியாகும். எடுத்துக்காட்டு : நெட்டிலிங்கம்.
Ø  கருவுற்ற சூல், விதை எனப்படுகிறது.
Ø  ஓர் மின்னணு உருப்பெருக்கி நுண்பொருளை 2 லட்சம் முதல் 3 லட்சம் மடங்குகள் பெரிதாகக் காட்டும்.
Ø  நுண்ணோக்கிகளின் முக்கிய லென்சுகள், கண்ணருகு லென்சு, பொருளருகு லென்சு என்று இரண்டு வகைப்படும்.
Ø  செல்கோட்பாட்டை வெளியிட்டவர் ஸ்லீடன், ஸ்வான்.
Ø  செல், புரோட்டோபிளாசம் மற்றும் பிளாஸ்மா படலத்தால் ஆனது.
Ø  செல்சுவர் செல்லுலோசால் ஆனது.
Ø  விலங்கு செல்களில் பிளாஸ்மா படலம் புற எல்லையாக அமைந்துள்ளது. இது கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆனது.
Ø  கோல்கை உறுப்புகள் சுரப்பி செல்களில் காணப்படும்.
Ø  ரைபோசோம் புரதம் தயாரித்தலில் காணப்படும்.
Ø  மைட்டோ காண்ட்ரியா ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுகிறது.
Ø  சென்ட்ரோசோம் செல்லின் ‘தற்கொலைப் பைகள்’ என்று அழைக்கப்படுகிறது.
Ø  உட்கரு உள்ள செல்களுக்கு யூகேரியோட் செல்கள் என்று பெயர். இவற்றின் அமைப்பினை ராபர்ட் பிரவுன் கண்டுபிடித்தார்.
Ø  உட்கருவில் செல் பிரிதல் மூலமாகவே செல்கள் உருவாகின்றன.
Ø  உட்கருவில் செல் பிரிதலில் காரியோகைனசிஸ், சைட்டோகைனசிஸ் என இரண்டு நிலைகள் உண்டு.
Ø  தாவரங்களில் வைரஸ் நோய்கள்: வாழையின் உச்சிக் கொத்து நோய், உருளையின் இலைச் சுருள் நோய், புகையிலையின் பல வண்ண இலை நோய்.
Ø  தாவரங்களில் பாக்டீரியா நோய்கள்: காரட்டில் மென் அழுகல் நோய், நெல்லின் பாக்டீரிய வெப்பு நோய்.
Ø  தாவரங்களில் பூஞ்சை நோய்கள்: கடுகுக் குடும்பத் தாவரங்களில் வெண்துரு நோய், கோதுமையில் கருத்துரு நோய், கரும்பில் செவ்வழுகல் நோய், உருளைக் கிழங்கில் பின்தோன்று வெப்பு நோய்.
Ø  முள்ளங்கியில் வெண்துரு நோய் அல்புகோ காண்டிடா என்னும் பூஞ்சையினால் உருவாகிறது.
 v  தமிழ்நாட்டில் நெற்பயிரின் பருவகாலங்கள்:

Ø  கார்காலம் - மே முதல் ஜூன் வரை
Ø  குறுவைகாலம் - ஜூன் முதல் ஜூலை வரை
Ø  தாளடி காலம் - செப்டம்பர் முதல் அக்டோபர் வரை.
Ø  சம்பா பருவம் - ஆகஸ்டு முதல் பிப்ரவரி வரை.
Ø  பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பயிர் உணவு பாஸ்பேட் ஆகும்.
Ø  பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் சல்பேட் இரண்டும் சாம்பல் சத்துக்கள்.
Ø  நைட்ரஜன் நிலைப்படுத்தும் பாக்டீரியம் - ரைசோபியம், அஸடோபாக்டர், மற்றும் நீலப்பச்சைப்பாசி.
Ø  பாஸ்பேட்டை கரைக்கும் பாக்டீரியா - பேசில்லஸ், சர்குலன்ட்ஸ்.
Ø  ஊட்டப் பொருட்களை உறிஞ்ச உதவும் பூஞ்சைகள் - குளோமல், ஜிஜைகாஸ்போரா.
Ø  களைச்செடிகளாக உள்ள சப்பாத்திக் கள்ளியை காக்னியல் பூச்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
Ø  பசுமைப் புரட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயிர்கள் - கோதுமை, உருளைக்கிழங்கு மற்றும் அரிசி.
Ø  ஐ.ஆர். 8 ரக நெல் பசுமைப் புரட்சியால் உருவாக்கப்பட்டது.
Ø  முதல் குட்டைரக நெல் ரகம் தைவான் நாட்டில் உருவாக்கப்பட்டது.
Ø  கரும்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிக அதிக அளவிலும், அதற்கு அடுத்தப்படியாக மகராஷ்டிரத்திலும், தமிழகத்திலும் பயிரிடப்படுகிறது.
Ø  ஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் கரும்பு நடவுக்கு ஏற்ற காலமாகும்.
 v  விலங்கியல்:

Ø  விலங்குகள் பலசெல் கொண்டவை.
Ø  பச்சைய நிறமி இல்லை. ஆனால், வேறுபட்ட நிறமிகளைக் கொண்டது.
Ø  உணர் உறுப்பு, நரம்பு மண்டலம் கொண்டவை.
Ø  செல் சுவர் இல்லை. ஆனால், செல்லைச் சூழ்ந்து செல் சவ்வு அல்லது பிளாஸ்மாலெம்மா காணப்படுகிறது.
Ø  யூக்ளினாவைத் தவிர மற்ற விலங்குகளில் கணிகங்கள் இல்லை.
Ø  பெரும்பாலும் விலங்குகள் திட உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ளும், உணவூட்ட முறை ஹோலோஸோயிக் ஆகும்.
Ø  சேமிப்பு உணவாக கிளைக்கோஜன் காணப்படும்.
Ø  பவளப்பூச்சிகள், கடற்பஞ்சு இவற்றைத் தவிர மற்ற எல்லா விலங்குகளும் உணவுக்காக இடம் விட்டு இடம் நகரும் தன்மையுடையவை.
Ø  யூரோட்ராபின் எனும் முக்கிய மருந்துப் பொருள் எந்த வினையின் போது கிடைக்கிறது - பார்மால்டிஹைடு அம்மோனியாவுடன் குறுக்க வினைபுரியும்போது கிடைக்கிறது.
Ø  மதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருட்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது - ஜீனாக் கண்ணாடி.
Ø  அசிட்டிக் அமிலத்தின் நீர்த்த நீர்க்கரைசல்களின் பெயர் - வினிகர்.
Ø  வினிகரில் எத்தனை சதவீதம் அசிட்டிக் அமிலம் இருக்கிறது - 6 - 10 சதவீதம்.
Ø  மண் வளத்திற்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய முதன்மை ஊட்டச் சத்துக்களை அளிக்கும் வேதிப் பொருட்கள் - செயற்கை உரங்கள் எனப்படும்.
Ø  பெட்ரோல், டீசல், உற்பத்திவாயு, கரிவாயு, மரக்கரி போன்றவை - இரண்டாம் நிலை எரிபொருள்.
Ø  புரோப்பேன், பியூட்டேன், ஐசோ - பியூட்டேன், பியூட்டிலின் முதலிய ஹைட்ரோ கார்பன்களில் ஏதேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் கலந்துள்ள கலவைக்கு என்ன பெயர் - எல்.பி.ஜி.
Ø  குளோரோபார்ம், ஈதர்கள், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை - மயக்கமூட்டிகளுக்கான எடுத்துக்காட்டுகள்.
Ø  மனநோயினை குணப்படுத்த பயன்படும் அமிலம் - பார்மிடியூரிக் அமிலம்.
Ø  மருந்துகளின் ராணி என்று அழைக்கப்படும் மருந்து - பென்சிலின்.
v  பேரண்டம்:

Ø  நட்சத்திரங்கள் தானாகப் பிரகாசிக்கும் தன்மை உடையன.
Ø  பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன். பகலில் தெரியும் ஒரே நட்சத்திரம் சூரியன்.
Ø  வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் தொலைவை அளக்க ஒளி ஆண்டு என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.
Ø  ஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஒரு ஆண்டில் கடக்கும் தொலைவு ஆகும்.
Ø  ஒளி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. தூரம் செல்கிறது.
Ø  சூரியனின் ஒளி புவியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
Ø  சூரிய குடும்பத்திற்கு அருகாமையில் உள்ள நட்சத்திரம் - ஃபிராக்ஸியா செட்னாரி.
Ø  சூரியக் குடும்பம் உள்ள அண்டத்தைப் பால்வழி அண்டம் என்று குறிப்பிடுகின்றோம்.
Ø  பால்வழி அண்டமானது சுருள் போன்ற அமைப்பைக் கொண்டது.
Ø  1994 ஆம் ஆண்டு ஷுமேக்கர் லெவி என்ற வால் நட்சத்திரம் வியாழன் கோள் மீது மோதியது.
Ø  சூரியன் பூமியை விட சுமார் 109 மடங்கு பெரியது.
Ø  சூரியன் பூமியில் இருந்து 149 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது.
Ø  சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை - 6000 டிகிரி செல்சியஸ்.
Ø  சூரியனின்  மையப் பகுதியின் வெப்பநிலை 1 லட்சம் டிகிரி செல்சியஸ்.
Ø  சூரியனின் அதிகமான வெப்பம் அதன் அணுக்கரு இணைப்பின் மூலம் பெறுகின்றன.
Ø  சூரியனில் உள்ள இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும்போது அதிக வெப்பம் வெளிப்படுகின்றது.
 v  ஆற்றல் ஓட்டம்:

Ø  சுற்றுப்புறச் சூழலிலிருந்து ஆற்றலை ஈர்த்து, தன்னுடைய உடற்செயல்களுக்காக அதை பயன்படுத்துவதால் ஒவ்வொரு உயிரினத்தையும் ஒரு ரசாயன தொழிற்சாலை என்கிறோம்.
Ø  சூரியசக்தியானது பூமிப்பரப்பை அடைவதற்குள் குறைந்த அலைநீளம் உடைய கதிர்வீச்சுகள் தடுக்கப்படுகின்றன.
Ø  சூரியசக்தியில் 1 சதவீதம் தான் பூமியின் வளிமண்டல மேற்பரப்பை அடைவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Ø  பூமிப்பரப்பில் விழும் பெரும்பான்மையான சூரிய சக்தி, நம் கண்ணுக்கு புலப்படும் சூரிய ஒளிதான்.
Ø  சூரியக் கதிர்வீச்சு அளவைக் கணக்கிட இயலாது. சுமாராக அது 1372 வாட்ஸ்/மீ இருக்கலாம்.
Ø  57 சதவீதம் சூரிய ஒளி வளிமண்டலத்தில் உறிஞ்சப்படுகிறது. 53 சதவீதம் நிலப்பரப்பையும், நீர்ப்பரப்பையும் வெப்பப்படுத்த செலவிடப்படுகிறது. மீதமுள்ள 8 சதவீதம் சூரிய ஒளி ஆற்றலே தாவரங்களை சென்றடைகின்றன.
Ø  ஒரு சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டமானது ஒரு முகப்பாதையில் செல்லக்கூடிய சுழற்சியற்ற வினையாகும்.
Ø  உயிரின தொகுப்புகளிடையே காணப்படுகின்ற ஒரு வழிப்போக்கான ஆற்றல் ஓட்டத்தில் வெப்ப இயக்கவியலின் இருவிதிகள் நிரூபணமாகின்றன.
Ø  வெப்ப இயக்க ஆற்றலின் முதல் விதியின்படி ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.
Ø  உயிர்ப் பொருள்களின் உலர் எடையின் அடிப்படையில் அமையும் கோபுரங்கள் உயிர்ப் புலக் கோபுரங்கள் எனப்படுகின்றன.
Ø  புல்வெளி மற்றும் காடு போன்ற சூழ்நிலைத் தொகுப்பில் உற்பத்தியாளர்கள் மட்டத்திலிருந்து உயிர் நுகர்வோர் மட்டம் நோக்கிச் செல்லச் செல்ல உயிர்ப்புலம் படிப்படியாகக் குறையும்.
 v  மீன் வளப் பொருள்களின் முக்கியத்துவம்:

Ø  புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருள்கள் நிறைந்த பழமையான ஒரு உணவு மீன் ஆகும்.
Ø  வயிற்றுப்புண் மற்றும் சீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு சிறப்பு உணவோடு மீனும் சேர்த்து தரப்படுகிறது.
Ø  மீன் உணவின் தனிப்பட்ட வேதித்தன்மையினால் இருதய நோயாளிக்கு மீன் உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Ø  வைட்டமின் - கண் பார்வைக்கு உதவி புரிகிறது. பையோட்டின், நியாசின் மற்றும் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருள்கள் மனிதனின் இயல்பான உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.
Ø  மீனில் உள்ள புளூரைடு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
Ø  சார்டைன்ஸ், ஹெரிங்க்ஸ் மற்றும் சால்மன் போன்றவற்றின் எண்ணெய்கள், சோப்பு மற்றும் வர்ணம் தயாரிப்பதில் பயன்படுகிறது.
Ø  மீனின் உண்ண முடியாத பாகங்களில் இருந்து கால்நடை, கோழி, வாத்து போன்றவைகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.
Ø  மீன்களின் கழிவுகளில் இருந்து உரங்களும் பசை பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.
Ø  சுறா மீனின் தோலில் இருந்து காலணிகள், கைப்பைகள் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.
Ø  இந்தியாவில் இறால் வளர்ப்பு மிக முக்கியான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.
Ø  இறால் வளர்ப்பில் உலக நாடுகளுள் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
Ø  இயற்கையான நீர்நிலைகளில் உள்ள இறால் குஞ்சுகளை வலையின் மூலம் பிடித்து, வளர்க்கும் குளங்களில் விடுதல் வழக்கமான இறால் வளர்ப்பு முறையாகும்.
Ø  வளர்க்கக் கூடிய இறால்களின் உதாரணங்கள்: பினோயஸ் இன்டிகஸ் மற்றும் பினேயஸ் மோனோடான்.
Ø  ஆல்காக்கள் உயிரியல் உரமாக பயன்படுத்தப்படுகின்றன.
Ø  ஸ்பிருலினா என்ற நீலப்பச்சை பாசி மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 1983 முதல் வளர்க்கப்படுகின்றது.
Ø  மண்புழு வளர்ப்பு வெர்மிகல்சர் என்று அழைக்கப்படுகிறது.
Ø  மண்புழுக்கள், மண் அமைப்பில் முக்கிய பங்கு பெறுகின்றன. அவை நிலத்தை சத்தமின்றி உழுது கரிமச் சத்துப் பொருள்களை மீண்டும் சுழலச் செய்ய உதவுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட உரம் தாவரங்களில் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.
Ø  மண்புழுக்கள் உற்பத்தி செய்த உரம் வெர்மி கம்போஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
Ø  கரிம கழிவுகள் மற்றும் பயிர் கழிவுகளை மண்புழுக்கள் உரமாக மாற்றும் செயல் வெர்மிகம்போஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது.
Ø  எண்டேஜெயிக்ஸ் - இவை மண் உண்ணிகள். இவை உண்ணுகின்றன. இவை படுக்கைவாட்டில் வளை அதிக கரிமப் பொருட்கள் கொண்ட மண்ணை செய்கின்றன. என்டேஜெயிக் மண்புழுவிற்கு எடுத்துக்காட்டு ஆக்டோகிட்டோனா தரஸ்டோனி ஆகும்.
Ø  பண்ணை விலங்குகளில் முட்டைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சி வெள்ளிப்புரட்சி எனப்படும்.