Wednesday, March 7, 2012

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16


பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவிப்புகள்.


*  பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும்.
 செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும், வேறு பள்ளி அறிவியல் ஆசிரியர் புறத்தேர்வராகவும் செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


* புறத்தேர்வர் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படுவர். புதுச்சேரியை பொருத்தவரை புதுச்சேரி முதன்மைகல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படுவர்.
*  அறிவியல் பாடத்தில் மொத்தம் 100 மதிப்பெண்ணில் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
*  எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 20 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 15 மதிப்பெண்ணும் பெற வேண்டும்.


* மாற்றுத்திறனுடைய மாணவர்கள் சொல்வதை எழுதுபவர் (SCRIBE) பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விரும்பினால் கருத்தியல் தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு மாணவர்கள்   பெற்ற மதிப்பெண்களை 100 க்கு மாற்றி வேறுபாட்டை செய்முறை மதிப்பெண்ணாக கொள்ளலாம்.
*  பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வை மொத்தம் இரண்டரை மணி நேரம் நடத்த வேண்டும்.
*  இயல் அறிவியல் பாடத்துக்கு ஒன்றேகால் மணி நேரமும்,  உயிர் அறிவியல் பாடத்துக்கு ஒன்றேகால் மணி நேரமும் தேர்வு நடத்த வேண்டும்.
*  காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இரு வேளைகளிலும் செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும்.
*  பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் பாடத்தில் மொத்தம் 16 வகையான செய்முறைகள் உள்ளன.
*  இந்த செய்முறைகள் தொடர்பான வினாக்களை குலுக்கல் முறையில் மாணவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.

* கணக்கீடு வினாக்களுக்கு ஒரு கணக்கீடு எடுத்தால் போதுமானது.

 *  செய்முறைத் தேர்வு (மொத்தம் 25 மதிப்பெண்):
*  புற மதிப்பீடு: 20 மதிப்பெண்
இயல் அறிவியல் | பாடக்குறியீடு எண் - 08:
இயற்பியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண்,
வேதியியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண்,
மொத்த மதிப்பெண்கள் : 10
உயிர் அறிவியல் | பாடக்குறியீடு எண் - 10:
தாவரவியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண்,
விலங்கியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண்,
மொத்த மதிப்பெண்கள் : 10
*  அகமதிப்பீடு: 5 மதிப்பெண்
மாணவர்களின் ஆய்வுக்கூட வருகை - 1  மதிப்பெண்  
மாணவர் ஆய்வக செயல் திறன் - 1  மதிப்பெண்  
மாணவர் ஆய்வக ஈடுபாடு - 1  மதிப்பெண்  
ஆய்வக பதிவுக் குறிப்பேடு - 2  மதிப்பெண்  
மொத்த மதிப்பெண்கள் : 5
மொத்த மதிப்பெண் -25
* செய்முறைத் தேர்வு நடத்தப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அந்த செய்முறைத் தேர்வு மையத்தின் தலைமைக் கண்காணிப்பாளராக செயல்பட வேண்டும்.
* செய்முறைத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும்.
* செய்முறைத் தேர்வு கால அட்டவணையை தலைமைக் கண்காணிப்பாளர்களே தனிக் கவனம் செலுத்தி தயாரிக்க வேண்டும்.
* செய்முறைத் தேர்வு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.விடைத்தாள்கள், வினாக்கள் பட்டியலையும் மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
*  இந்த செய்முறைத் தேர்வுகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே நடத்தி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்ப வேண்டும்.
*  இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை சுமார் 10.75 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
* செய்முறைத் தேர்வுக்கு வராதவர்களின் பதிவெண்களைப் பாட வாரியாகக் குறிப்பிட்டு, அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர்(பணியாளர்), சென்னை -600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
* செய்முறைத் தேர்வை எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி நடத்துவது மாவட்டக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post
Next Post

0 Comments: