Friday, April 27, 2012

உவமையால் விளக்கப்படும் பொருள்


*  தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
*  இலைமறை காய் போல் - மறைபொருள்
*  மழைமுகம் காணாப் பயிர் போல -  வாட்டம்
*  விழலுக்கு இறைத்த நீர் போல  - பயனற்றது
*  சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல   -  மிக்க மகிழ்வு
*  உடுக்கை இழந்தவன் கை போல  - நட்புக்கு உதவுபவன்
*  மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல  - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
*  இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
*  குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
*  வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
*  வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
*  புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது  - சான்றாண்மை
*  சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
*  அனலில் விழுந்த புழுப்போல    -    தவிர்ப்பு
*  கண்ணைக் காக்கும் இமை போல  -  பாதுகாப்பு
*  நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை  -  நிலையாமை
*  உமி குற்றிக் கைவருந்தல் போல  -     பயனற்ற செயல்
*  பல துளி பெருவெள்ளம் -  சேமிப்பு
*  நத்தைக்குள் முத்துப் போல -  மேன்மை
*  ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
*  பூவோடு சேர்ந்த நார் போல -  உயர்வு
*  நாண் அறுந்த வில் போல -  பயனின்மை
*  மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
*  தாயைக் கம்ட சேயைப் போல   -   மகிழ்ச்சி
*  சிறகு இழந்த பறவை போல  -  கொடுமை
*  மழை காணாப் பயிர் போல  - வறட்சி
*  நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்
*  இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி
*  திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் -  பெரியபுராணம்
*  இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
*  வள்ளலார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகளார்
*  விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் - கம்பர்
Previous Post
Next Post

1 Comments:

Unknown said...

ceentha sevai vazthukkal